| DATE | TIMINGS |
|---|---|
| 24 Nov 2015 | 6.00 PM |
Federation of Tamil Associations in United Kingdom (FeTAUK) மற்றும் UKTNCC இணைந்து இலண்டனில் TamilTalk என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. ஐக்கிய இராச்சியத்தில் வாழும் தமிழ் துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னலமற்ற மக்கள் பணியாளர்களை இனம் கண்டு, இளையத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
இதன் துவக்கவிழா, வரும் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு இலண்டனில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. தமிழ் கணினியின் தந்தை முனைவர் கு. கல்யாணசுந்தரம் இவ்விழாவைத் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
இலண்டன் மாநகரில் நடைபெறும் இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். உங்களது நண்பர்களுக்கும், மற்ற தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்த தகவலைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.